சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினர்


சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 8:00 PM GMT (Updated: 10 May 2022 8:00 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 678 பேர் தேர்வு எழுதவில்லை

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 678 பேர் தேர்வு எழுதவில்லை.தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வுகள் நேற்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன இந்த கல்வி மாவட்டங்களில் தேர்வு எழுதுவதற்காக 77தேர்வு மையங்களும் ஒரு தனியார் தேர்வு மையமும். அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக 8,253 மாணவர்களும் 9030 மாணவிகளும் சேர்த்து 17 283 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் 7 ஆயிரத்து 852 மாணவர்களும் 8 ஆயிரத்து 753 மாணவிகளும் சேர்த்து 16 ஆயிரத்து 605 பேர் தேர்வு எழுதினார்கள்.விண்ணப்பித்தவர்களில் 401 மாணவர்களும் 277 மாணவிகளும் சேர்த்து 678 பேர் தேர்வு எழுத வில்லை.

Next Story