ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 May 2022 8:15 PM GMT (Updated: 10 May 2022 8:15 PM GMT)

வீரவநல்லூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 34). இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் வீரவநல்லூர்-காருக்குறிச்சி இடையே உள்ள தண்டவாள பகுதியில் நேற்று அதிகாலை குணசேகரன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவில் அந்த வழியாக சென்ற செங்கோட்டை பயணிகள் ரெயில் மோதி அவர் இறந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story