பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 11 May 2022 11:19 AM GMT (Updated: 11 May 2022 11:19 AM GMT)

திருமருகல் அருகே பெரிய நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது

திட்டச்சேரி;
திருமருகல் அருகே பெரிய நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.
சித்திரை திருவிழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தர்ணா சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
 மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
சாமி வீதிஉலா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதிஉலா நேற்று முதல் இரவு நடைபெற்றது. இதில் பெரியநாயகி அம்மன், பெத்தர்ணா சாமி வாகனங்களில் வீதி உலா ரதக்காவடியுடன் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.



Next Story