‘ஏர்ஹாரன்’ பயன்படுத்திய 2 பஸ்களுக்கு அபராதம்


‘ஏர்ஹாரன்’ பயன்படுத்திய 2 பஸ்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 May 2022 1:04 PM GMT (Updated: 11 May 2022 1:04 PM GMT)

திருவண்ணாமலையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 2 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் பஸ்களில் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய ‘ஏர்ஹாரன்’ பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அலுவலர்கள் 2 பஸ்களிலும் பொருத்தப்பட்டிருந்த 3 ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பஸ்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

Next Story