விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 4:57 PM GMT (Updated: 11 May 2022 4:57 PM GMT)

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டியை அடுத்த பனை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பசம்மா (வயது 42). இவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பசம்மா வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பசம்மா பலியானார். தற்கொலை குறித்து அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story