பூம்புகாரில் கடல் சீற்றம்


பூம்புகாரில் கடல் சீற்றம்
x
தினத்தந்தி 11 May 2022 5:22 PM GMT (Updated: 11 May 2022 5:22 PM GMT)

பூம்புகாரில் கடல் சீற்றமாக காணப்பட்டது

திருவெண்காடு
அசானி புயலின் காரணமாக சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, கீழ மூவர்கரை, தொடுவாய் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் சிலர் கூறுகையில், புயலின் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் என்றனர். மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.


Next Story