கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா
பிரம்மோற்சவத்தையொட்டி கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 9-ந் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10-ந் தேதி வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உபய நாச்சிகள் சமேத உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றன. பின்னர் வரதராஜ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் திருவீதியுலா நடைபெற்றது. மாலையில் சிறப்பு திருமஞ்சனமும், அனுமந்த சேவையும், வீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பாசுரங்களைப் பாடி வழிபாடுகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story