மூதாட்டி உள்பட 2 பேரிடம் தங்க சங்கிலி பறிப்பு
நாகர்கோவிலில் மூதாட்டி உள்பட 2 பேரிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மூதாட்டி உள்பட 2பேரிடம தங்க சங்கிலி பறிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் புத்தேரி கணேஷ் நகரை சேர்ந்தவர் கணேஷன். இவருடைய மனைவி வல்சலா (வயது 52). சம்பவத்தன்று இவர் புத்தேரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், வல்சலாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதுபற்றி வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதேபோல் நாகர்கோவில் மேலபுத்தேரி பகுதியை சேர்ந்த கமலம் (75) என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், கமலம் கழுத்தில் கிடந்த 1¼ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து கமலம் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story