22 நாய்களுடன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்- பெற்றோர் மீது வழக்கு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 May 2022 11:47 AM GMT (Updated: 12 May 2022 11:47 AM GMT)

22 நாய்களுடன் சிறுவனை வீட்டில் பூட்டி வைத்த பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புனே, 
  புனே கோந்துவா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே 11 வயது சிறுவன் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருப்பதையும், அவனுடன் அங்கு பல நாய்கள் இருந்ததையும் நபர் ஒருவர் கண்டார். மேலும், சிறுவன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த நபர் இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்தார். 
  இதன்பேரில் கடந்த 9-ந் தேதி அதிகாரி ஒருவர் சிறுவன் வீட்டிற்கு சென்றபோது, 20 முதல் 22 நாய்களுடன் சிறுவன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 
  மேலும் வீட்டில் இருந்து பயங்கர தூர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அதிகாரி சிறுவனை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை நாய்களுடன் வீட்டில் பூட்டி வைத்து சென்ற பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story