14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்


14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 13 May 2022 7:47 PM GMT (Updated: 13 May 2022 7:47 PM GMT)

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

திருமங்கலம், 
இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காதலன் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். 
சிறுமி 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் ஆத்தூரை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து ஜீவானந்தம், மாணவியை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக கூறி மதுரைக்கு வரச் சொல்லியுள்ளார். 
அதன்படி கடந்த 8-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் வந்த ஜீவானந்தமும், மாணவியும் பழனி, கோவை என பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பின்னர் 10-ந் தேதி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். 
பாலியல் பலாத்காரம் 
அங்கு வந்த வாலிபர் ஒருவர் நள்ளிரவில் சிறிய வயது காதல் ஜோடி பஸ் நிலையத்தில் தனியாக நிற்பதை பார்த்து அவர்களிடம் சென்று, தான் போலீஸ் எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். பின்னர் உங்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது, உங்களிடம் விசாரிக்க வேண்டும் என்றுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.. 
அங்கு ஜீவானந்தத்தை இறக்கிவிட்டு மாணவியை மட்டும் தனியாக அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மீண்டும் இருவரையும் அழைத்து வந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என அவர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். 
தொடர்ந்து ஜீவானந்தம் மாணவியை, சேலம் ஆத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மாணவி தனக்கு நிகழ்ந்த சம்பவங்களை ஜீவானந்தத்தின் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மாணவியுடன் ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கிருந்து போலீசார், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
போக்சோவில் கைது 
அதன்பேரில் திருமங்கலம் போலீசார், ஆத்தூர் சென்று மாணவி மற்றும் ஜீவானந்தத்தை மீட்டு மதுரைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் திருமங்கலம் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் குறித்து விசாரித்தனர். 
மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபரின் அடையாளம் தெரிந்தது. விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆண்டனி அலெக்ஸ்(30) என்பதும், சென்னையில் உள்ள பிரபல பிஸ்ெகட் நிறுவனத்தில் லாரி டிரைவராக இருப்பதும்  தெரியவந்தது. இதையடுத்து ஆண்டனி அலெக்ஸ், ஜீவானந்தம் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
மேலும், சிறுமியை மீட்டு மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.

Next Story