தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்


தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 9:26 PM GMT (Updated: 13 May 2022 9:26 PM GMT)

தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கருப்பூர் சேனாபதி கிராமத்தில் உள்ள தண்டபாணி சிமெண்ட்ஸ் ஆலையின் செயல்பாட்டில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விஸ்தரிப்பு செய்து சுண்ணாம்புக்கல் எடுக்க அந்த ஆலை உத்தேசித்துள்ளது. இதற்காக பொதுமக்கள் கருத்ைத கேட்டுணரும் கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 17-ந்தேதி கீழப்பழுவூர் அருணாச்சல நகரில் உள்ள தனலட்சுமி திருமண மகாலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு மறு நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழும அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story