மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்
மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
குளித்தலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (33). இவர் கார் ஒன்றில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு இரவு சென்றுகொண்டிருந்தார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் சாலையோர பள்ளத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மெய்யப்பன், அவரது மனைவி சரண்யா (31), தாயார் பழனியாயி (46), தங்கை புஷ்பா (29), தங்கையின் மகள் மதுசரா (3) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story