ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த முதியவர் சாவு


ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 17 May 2022 1:55 PM GMT (Updated: 17 May 2022 1:55 PM GMT)

ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயம் அடைந்த முதியவர் சாவு

சமயபுரம், மே.18-
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில்  19 பேர் காயம் அடைந்தனர். இதில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த லால்குடி அருகே உள்ள மாந்துறை பகுதியை சேர்ந்த சூசை (வயது 60) என்பவர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சமயபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரியாபானு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story