சுவர் சரிந்து தொழிலாளி சாவு


சுவர் சரிந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 17 May 2022 7:19 PM GMT (Updated: 17 May 2022 7:19 PM GMT)

சுவர் சரிந்து தொழிலாளி சாவு

மதுரை
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் தொடக்கஉரை நிகழ்த்தினார். மாநில பொது செயலாளர் முத்துக்குமார் விளக்கஉரை நிகழ்த்தினார். மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, வருவாய்த்துறை அலுவலர் சங்க பொது செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும், தோட்டக்கலைத்துறைக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் வழங்க வேண்டும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சு பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.

Next Story