தூய்மை பணி சிறப்பு முகாம்

தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூய்மை பணி சிறப்பு முகாம்
Published on

தா.பேட்டை, மே.17-
தா.பேட்டை பேரூராட்சி சார்பில் பொது சுகாதார தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் எம்.மயில்வாகனன், பேரூராட்சி செயல்அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிள்ளாதுரை, செவந்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் பேரூராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com