கர்நாடகத்தில் 10-ந் தேதிக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
கர்நாடகத்தில் 10-ந் தேதிக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளருமான வேணுகோபால் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற 10-ந் தேதிக்கு பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்படும். கர்நாடக மாநில காங்கிரசில் கருத்துவேறுபாடு இல்லை.
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். கூட்டணியில் குழப்பம் இருந்து வருவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. பா.ஜனதாவினர் எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சித்து வருகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளருமான வேணுகோபால் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற 10-ந் தேதிக்கு பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்படும். கர்நாடக மாநில காங்கிரசில் கருத்துவேறுபாடு இல்லை.
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். கூட்டணியில் குழப்பம் இருந்து வருவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. பா.ஜனதாவினர் எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சித்து வருகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.
Related Tags :
Next Story