நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை


நடிகர்கள்  சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா  ஆகியோருக்கு ஓட்டு இல்லை
x
தினத்தந்தி 18 April 2019 7:33 AM GMT (Updated: 18 April 2019 7:33 AM GMT)

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை

நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை. எனவே அவர் ஒட்டுப்போட செல்லவில்லை.

குணச்சித்திர நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான ரமேஷ் கண்ணா காலையிலேயே வாக்களிக்கச் சென்றார். அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து தனது ஆதங்கத்தை வீடியோ மூலமாக பேசி வெளியிட்டுள்ளார் ரமேஷ் கண்ணா.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங். கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வாக்களித்தார்.

சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் கராத்தே தியாகராஜன்.

தஞ்சை மாவட்டம் அருண்மொழிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் 4 மணிநேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

கர்நாடகா: பெங்களூரு சென்டரல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும், நடிகருமான பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை திரிஷா வாக்களித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் விஜய் சேதுபதி.

Next Story