டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கிறார்
டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்திக்கிறார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுகிறார்.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுகிறார்.
Related Tags :
Next Story