பெற்ற மகனை கருணை கொலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரும் பெற்றோர்
இந்தியாவில் பெற்ற மகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் உருக வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விபின் என இளைஞர் இரத்த சோகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்காக பெற்றோர் பணம் செலவழித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் ஏழை பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.அதில், மகனின் சிகிச்சை செலவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையெனில் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளனர். இந்நிலையில், பலர் கண்டிப்பாக அரசாங்கம் சிகிச்சைக்காக உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்
Next Story