மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு நிதி அளித்த 11 பேர் கைது


மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு நிதி அளித்த 11 பேர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2017 9:15 PM GMT (Updated: 9 Feb 2017 7:24 PM GMT)

மத்தியபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் இருப்பதாகவும் அவர்களுக்கு ஒரு கும்பல் நிதி உதவி அளிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போபால்

மத்தியபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் இருப்பதாகவும், அவர்களுக்கு அதே மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் நிதி உதவி அளித்து வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் பயங்கரவாத எதிர்ப்புபடையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், குவாலியர் மாவட்டத்தில் 5 பேர், போபாலில் 3 பேர், ஜபல்பூர் மாவட்டத்தில் 2 பேர், சாட்னாவில் ஒருவர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ‘ஹவாலா’, லாட்டரி மோசடிகளிலும் ஈடுபட்டுவந்ததோடு, பாகிஸ்தானியர்களின் வழிகாட்டுதலின் படி இங்கு உள்ள அந்நாட்டு உளவாளிகளின் வங்கிகணக்குகளில் பணத்தை ‘டெபாசிட்’ செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்து உள்ளனர். இவர்கள் 11 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story