மணிப்பூரில் நாங்கள் ஆட்சியமைப்போம்; பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் நம்பிக்


மணிப்பூரில் நாங்கள் ஆட்சியமைப்போம்;  பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் நம்பிக்
x
தினத்தந்தி 12 March 2017 8:35 AM GMT (Updated: 12 March 2017 8:35 AM GMT)

மணிப்பூரில் நாங்கள் ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையை பெறுவோம் என்று பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இம்பால்,

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தங்களது கட்சி மணிப்பூரில் ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையை பெறுகின்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

”பாஜகவிற்கு ஏற்கனவே சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிறரின் ஒத்துழைப்பையும் பெற்று மணிப்பூரில் ஆட்சியமைப்போம்” என்றார்.மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு தெளிவாக காங்கிரஸ்சிற்கும் அதன் முதல்வர் இபோபி சிங்கிற்கும் எதிராக அமைந்துள்ளது என்றார் அவர்.

ராம் மாதவ் கடந்தாண்டு அஸ்ஸாமிலும், இப்போது மணிப்பூரிலும் பாஜக பெரியளவில் வெற்றி பெற பின்னணியில் முக்கிய பங்காற்றியுள்ளார். மக்களிடம் வாக்குகளை பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு கடமையாற்ற கடன் பட்டுள்ளன, என்றார் ராம் மாதவ்.2012 ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் காங்கிரஸ் மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. அத்தேர்தலில் பாஜகவிற்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story