ஒடிசா கடல் பகுதியில் அக்னி–2 ஏவுகணை சோதனை


ஒடிசா கடல் பகுதியில் அக்னி–2 ஏவுகணை சோதனை
x
தினத்தந்தி 4 May 2017 8:45 PM GMT (Updated: 4 May 2017 7:48 PM GMT)

ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி–2 ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தப்பட்டது.

பலாசோர்,

ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி–2 ஏவுகணையை செலுத்தி நேற்று காலை 10.24 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 20 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை 2 திட எரிபொருள் நிலையை கொண்டது.

சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணை சோதனை எதிர்பார்த்தபடி அமையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 1 டன் அணு ஆயுத பொருளை தாங்கி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய வகையில் இந்த ஏவுகணையை ஐதராபாத்தில் உள்ள
டி.ஆர்.டி.ஓ. (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) வடிவமைத்து இருக்கிறது.

அணு ஆயுத பொருளின் எடையை குறைப்பதன் மூலம் இந்த ஏவுகணை இலக்கை தாக்கும் தூரம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story