சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு


சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 May 2017 6:03 AM GMT (Updated: 19 May 2017 6:03 AM GMT)

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து உள்ளது.


புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர்முகர்ஜி ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என சிபிஐ பதிவு செய்து உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.  

அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் சென்னை வீடு உள்பட 14 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 

சிபிஐ சோதனையை அடுத்து இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து உள்ளது.


Next Story