ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சாமியார் கைது


ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து  கர்ப்பமாக்கிய சாமியார் கைது
x
தினத்தந்தி 23 Sep 2017 10:51 AM GMT (Updated: 23 Sep 2017 10:51 AM GMT)

ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி நழுவிய சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

மதுரா

உத்தரபிரதேசம்  பார்சனாவில் ஆசிரமம் நடத்தி வருபவர்  சாது கோவிந்த் தாஸ். இவர் ஒரு ஊன முற்ற பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக  புகார் எழுந்து உள்ளது.  இது தொடர்பாக  மேற்கு வங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.  இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மேற்கு வங்காளம் அழைத்து செல்லப்பட்டார்.

பாதிக்கபட்ட பெண் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த சில மாதங்களாக சாமியாரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.பல முறை சாமியாரால் அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அந்த பெண்  கர்ப்பமானார். இதை தொடர்ந்து அந்த பெண் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றபட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற அந்த பெண் சாமியார் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து மேற்கு வங்காள போலீசார் உள்ளூர் போலீசார் உதவியுடன்  ஆசிரமத்திற்கு சென்று சாமியாரை கைது செய்தனர்.

சாமியார் தன் மீது கூறப்பட்ட  குற்றச்சாட்டுகள் குறித்து  மறுப்பு தெரிவித்துள்ளார். எனக்கு எதுவும் தெரியாது. இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது ஒரு நாள் ஒரு தம்பதியினர் இந்த பெண்ணை என்னை பார்த்து கொள்ள சொல்லி இங்கு விட்டு சென்றனர் என சாமியார் கூறி உள்ளார்.

Next Story