திறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை: அமித்ஷாவுக்கு மாயாவதி பதில்


திறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை: அமித்ஷாவுக்கு மாயாவதி பதில்
x
தினத்தந்தி 12 Oct 2017 3:26 AM GMT (Updated: 12 Oct 2017 3:26 AM GMT)

திறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை என்று பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

சிறப்பாக பேசுவதைக் காட்டிலும் திறம்பட செயல்படும் பிரதமரே நாட்டுக்குத் தேவை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.மத்திய பாஜக அரசு, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதசே மாநிலம், அமேதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, காங்கிரஸைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் விமர்சித்துப் பேசினார். பாஜக ஆட்சியால் நாட்டுக்கு என்ன பலன் கிடைத்திருக்கிறது? என்று ராகுல் எழுப்பிய கேள்விக்கு அக்கூட்டத்தின் வாயிலாக பதிலளித்த அமித் ஷா, பேசக் கூடிய பிரதமரை பாஜக நாட்டுக்குத் தந்துள்ளது என்றார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் வகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.இந்நிலையில், அமித் ஷாவுக்கு பதிலடி தரும் வகையில்  கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, இந்த தேசத்துக்குத் தேவை பேசக் கூடிய பிரதமர் அல்ல; திறம்பட செயல்படக் கூடிய பிரதமரே” என்று தெரிவித்துள்ளார்.


Next Story