புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் பாதுகாப்புதுறை மந்திரி சந்திப்பு
புதுடெல்லியில் பிரான்ஸ் பாதுகாப்புதுறை மந்திரி ஃபிளோரன்ஸ் பார்லி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்புதுறை மந்திரி ஃபிளோரன்ஸ் பார்லி, புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கூறுகையில்,
பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியா-பிரான்ஸ் இடையே முக்கிய தூண்களில் ஒன்றாகும்.
மேக் இன் இந்தியா கட்டமைப்பில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Related Tags :
Next Story