வில்வித்தை பயிற்சியில் இளம் வீராங்கனையின் கழுத்தில் அம்பு குத்தியது


வில்வித்தை பயிற்சியில் இளம் வீராங்கனையின் கழுத்தில் அம்பு குத்தியது
x
தினத்தந்தி 30 Oct 2017 2:45 PM GMT (Updated: 30 Oct 2017 2:44 PM GMT)

மேற்கு வங்காளத்தில் வில்வித்தை பயிற்சியின்பொழுது இளம் வீராங்கனையின் தவறுதலால் அம்பு ஒன்று அவரது கழுத்தில் குத்தி நின்றது.

போல்பூர்,

மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் கிரீரா கேந்திரா என்ற வில்வித்தை பயிற்சி மையம் உள்ளது.

இங்கு பசில்லா கத்தூன் என்ற இளம் வீராங்கனை பயிற்சி பெற்று வருகிறார்.  இந்த நிலையில், இந்த மையத்தில் 3 வில்வித்தை வீரர்கள் இன்று பயிற்சி மேற்கொண்டனர்.  அவர்களில் ஜுவல் ஷேக் என்ற வீரர் தனது இலக்கை குறி வைத்து அம்பு ஒன்றினை எய்துள்ளார்.  பசில்லா திடீரென அதன்முன் வந்து நின்றுள்ளார்.  இதில் அம்பு பின்பிறத்தில் இருந்து அவரது வலது கழுத்தில் குத்தி நின்றது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.  அதன்பின் அவரது நிலைமை சீராக உள்ளது.


Next Story