மகாராஷ்டிராவில் 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் பலி
மகாராஷ்டிராவில் உள்ளூர் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் இன்று பலியாகினர். #accident #Mumbai
மும்பை,
மேற்கு மகாராஷ்டிராவில் சங்கிலி மாவட்டத்தில் காடேகாவன்-சங்கிலி சாலையில் வந்து கொண்டிருந்த ஆடம்பர ரக கார் மீது எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டர் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 மல்யுத்த வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
அவர்கள் ஆந்த் கிராமத்தில் நடந்த மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு சங்கிலி மாவட்டத்தில் உள்ள குண்டல் நகருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சங்கிலியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
#wrestlers | #roadaccident | #Mumbai
Related Tags :
Next Story