ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் 2 வீரர்கள் படுகாயம்
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். #Terrorists #CRPF
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தர்ல் அருகே உள்ள கிராமத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாதுகாப்பு வீரர்கள், பொதுமக்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story