மனைவிக்கு கோவில் கட்டி வழிபட்டு வரும் விவசாயி


மனைவிக்கு கோவில் கட்டி வழிபட்டு வரும் விவசாயி
x
தினத்தந்தி 24 Feb 2018 7:15 AM GMT (Updated: 24 Feb 2018 7:15 AM GMT)

விவசாயி ஒருவர் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் சம்பவம் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




கர்நாடகாவின் சாம்ராஜ் நகரை  சேர்ந்தவர் ராஜுசுவாமி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். ராஜம்மாள் அப்போது தனக்காக கோவில் கட்டுவீர்களா என்று கேட்டுள்ளார்.இதை மனதில் வைத்துக் கொண்ட ராஜுசுவாமி, தன்னிடம் இருந்த 3 ஏக்கர் நிலப்பரப்பில் மனைவிக்காக கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். 

கோவில் கட்டிக் கொண்டிருந்த நிலையில் ராஜம்மாள் திடீரென்று இறந்துவிட்டார். இருப்பினும் தனது மனைவிக்காக கோவில் பணிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர் பின்வாங்கவில்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டு கோவில் பணி முடிந்துள்ளது. இந்த கோவிலில் சிவன், நவக்கிரகம், சனீஸ்வரன் உள்ளிட்ட சிலைகளுடன் தனது மனைவி ராஜம்மாவின் சிலையையும் வைத்து கடந்த 12 வருடங்களாக ராஜு வழிபட்டு வருகிறார்.தற்போது பக்கத்து கிராமங்களில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு மக்கள் வரும் நிலையில் இந்தக் கோவில் ராஜம்மா கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

Next Story