புதுச்சேரியில் உள்ள அரவிந்தா் ஆசிரமம் சென்றார் பிரதமா் மோடி
இன்று பிரதமா் புதுச்சேரியில் உள்ள அரவிந்தா் ஆசிரமத்திற்கு வந்துள்ளார். #NarendraModi
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு சென்ற பிரதமா் மோடி அங்குள்ள அரவிந்தா் ஆசிரமத்திற்கு சென்று சுற்றிப்பார்த்தார் பிறகு வழிபட்டு சிறிது நேரம் தியானம் செய்தார்.
இதைத்தொடா்ந்து ஆரோவில் நடக்கும் பொன்விழா நிகழ்ச்சியிலும் மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார். இதையொட்டி,பிரதமா் செல்கின்ற பாதைகளில் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமா் மோடியுடன் துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, முதல்வா் நாராயண சாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனா்.
Related Tags :
Next Story