புதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாக்க மத்திய அரசு உதவி செய்யும் - பிரதமர் மோடி


புதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாக்க மத்திய அரசு உதவி செய்யும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Feb 2018 9:44 AM GMT (Updated: 25 Feb 2018 10:00 AM GMT)

புதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாக்க மத்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்திl நடைபெற்ற பா ஜ க பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

* முத்ரா கடன் திட்டத்தை புதுச்சேரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு அரசு நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறதா? புதுச்சேரியில் பல ஆண்டுகளாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாதது ஏன்? நம் அனைவரும் புதிய இந்தியா உருவாக சபதம் ஏற்போம்.

* ஒரே குடும்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 48 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்துள்ளது. 

* 48 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் செய்ததையும்,  48 மாதங்கள் ஆட்சியில் பாஜக அரசு செய்ததையும் அறிவுஜீவிகள் சிந்திக்க பார்க்க வேண்டும்.

* ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்த அரவிந்த் கோஷை ஆரத்தழுவிக் கொண்டது புதுச்சேரி பாரதியும் தேசியக்கவியாக உருவெடுத்தது இங்கு தான்.

* புதுச்சேரி ஏன் பின்னடைவு அடைந்தது என காங்கிரஸ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும்.

* ஜந்தன் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ஒன்றரை லட்சம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

* ஜவுளித்துறையில் செழித்துக் கொண்டிருந்த புதுச்சேரி தன் மினு மினுப்பை இழந்து விட்டது.

* ஜூன் மாதத்திற்கு பிறகு புதுச்சேரியின் ஒரே ஒரு முதல்வராக நாரயணசாமி மட்டுமே இருப்பார்.

* வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றுவிடும்.

* பிரெஞ்சு அமைப்பின் மூலம் புதுச்சேரியில் குடிநீர்த்திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை முழுவதுமாக நொடிந்து போய் விட்டது.

* புதுச்சேரி ஏன் பின்னடைவு அடைந்தது என காங்கிரஸ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும்.

* புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து, ரூ 1,800 கோடி ஒதுக்கியுள்ளது.

* புதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாகமாக்க மத்திய அரசு உதவி செய்யும்.

* புதுச்சேரியில்தான் பிரதமர் மத்திய ஜன் தன் யோஜனா திட்டம் 100% நிறைவேறியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story