போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
அரியானா மாநிலத்தில் பள்ளிக்கூட முதல்வர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
ஜலந்தர்
அரியான மாநிலத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பரீட்சை எழுதுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அவரது தந்தை பள்ளி முதல்வரிடம் பேசி உள்ளார். இதில் இருவரும் பேசி, முதல்வருக்கு ரூ. 10 ஆயிரம் தருவதாக கூறி உள்ளார்.
அதன் படி கடந்த செவ்வாய்க்கிழமை சம்பந்தபட்ட மாணவிக்கு பதில் வேறு ஒருவர் பரீட்சை எழுத அனுப்பட்டு உள்ளார். அந்த சமயத்தில் பள்ளி முதல்வர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இது குறித்து மாணவி தந்தையிடம் கூறி உள்ளார். இதை தொடர்ந்து தந்தை போலீசில் புகார் செய்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது. பள்ளி முதல்வர் உள்பட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
Related Tags :
Next Story