தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தியிருக்கிறது கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தாக்கு
கெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தி இருக்கிறது என்று மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார்.#AAP #BikramSinghMajithia
புதுடெல்லி,
கெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் செய்தியார்களிடம் கூறியதாவது:
தவறான பிரச்சாரத்தை பரப்பி இருப்பது ஆத் ஆத்மி கட்சியின் தரம் குறைந்த அரசியலை வெளிப்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் தவறான பிரச்சாரத்தையே மக்களிடம் பரப்பி உள்ளனர். இந்தநிலையில் கெஜ்ரிவால் மஜிதியாவிடம் தான் கூறியதை ஒப்புக்கொண்டது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story