காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி பொய்யான தகவல்களை பரப்புகிறார் ரந்தீப் சுர்ஜீவாலா


காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி பொய்யான தகவல்களை பரப்புகிறார்  ரந்தீப் சுர்ஜீவாலா
x
தினத்தந்தி 21 March 2018 11:06 AM GMT (Updated: 21 March 2018 11:06 AM GMT)

காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி பொய்யான தகவல்களை பரப்புகிறார் என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா கூறியுள்ளார். #BJP #Congress

புதுடெல்லி,

அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூக்கை நுழைக்க நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இது குறித்து  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா  கூறுகையில்,

பாஜக போலியான செய்திகள் மற்றும் போலியான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.  இதுவும் அதுபோல தான் தோன்றுகின்றது. போலியான செய்தியாளர்கள் சந்திப்பு, போலியான அறிக்கைகள் போலியான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பாஜக தினந்தோறும் நடத்தி வருகிறது. 

காங்கிரஸ் கட்சியோ காங்கிரஸ் தலைவரோ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவைகளை ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்தபோவதும் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story