காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் இரு போலீசார் உயிரிழப்பு
காஷ்மீரின் குபுவாராவில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் இரு போலீசார் உயிரிழந்தனர். #KupwaraEncounter
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாராவில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்றும் அங்கு மோதல் வெடித்து உள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே வெடித்த மோதலில் இரு போலீசார் உயிரிழந்தனர். காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படை தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story