இமாச்சல பிரதேசம்; பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாயினர். #ShimlaBusAccident
சிம்லா,
இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் மன்னவ் எனும் இடத்தில் இருந்து இன்று ராஜ்கார் நோக்கி சென்ற பேருந்தானது சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நயி-நேட்டி அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் மன்னவ் எனும் இடத்தில் இருந்து இன்று ராஜ்கார் நோக்கி சென்ற பேருந்தானது சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நயி-நேட்டி அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story