கர்நாடக தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தல்


கர்நாடக தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2018 10:54 AM GMT (Updated: 15 May 2018 10:54 AM GMT)

கர்நாடக மாநில தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தி உள்ளது. #KarnatakaElections2018 #BJP

மும்பை, 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றதை நம்ப முடியவில்லை என கூறிஉள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேர்தல் முடிவானது மாநிலத்தில் மக்கள் மத்தியில் நிலவும் சூழ்நிலையுடன் ஒத்திசையவில்லை என குற்றம் சாட்டிஉள்ளது.

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் முன்னிலை பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை 112-ஐ எட்டவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. தேர்தல் வெற்றியை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என என்சிபி வலியுறுத்தி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு சிறப்பாகவே செயல்பட்டது, அங்கு சித்தராமையா அரசுக்கு எதிரான நிலைப்பாடு தென்படவில்லை. இப்போது பாரதீய ஜனதா வெற்றி சூழ்நிலையானது மிகவும் நம்பமுடியாததாக உள்ளது. மக்களின் மத்தியில் நிலவும் சூழ்நிலைக்கும், இப்போது வெளியாகி உள்ள முடிவுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பாரதீய ஜனதா மற்றும் அதன் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா மீதான பார்வை சரியானதாக இல்லை. கர்நாடகாவில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சியானது வரையறுக்கப்பட்டது, அப்படியிருக்கையில் இந்த முடிவை ஆய்வு செய்ய வேண்டும், என கூறிஉள்ளார். 

சந்தேகங்களை தீர்க்க தேர்தல் ஆணையம் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் மேற்கொள்ள வேண்டும், காலதாமதம் ஏற்படலாம் ஆனால் சந்தேகங்கள் தீர்க்கப்படும், இதனை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறிஉள்ளார் ஜெயந்த் படேல்.

Next Story