டெல்லியில் பயங்கரம் சிறுமி 12 துண்டாக வெட்டிக் கொலை


டெல்லியில் பயங்கரம் சிறுமி 12 துண்டாக வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 21 May 2018 5:25 AM GMT (Updated: 21 May 2018 5:25 AM GMT)

டெல்லியில் சிறுமி ஒருவர் 12 துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

புதுடெல்லி

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் சோனியை,   கர்கெட்டாவை சேர்ந்த மன்ஜித் என்பவர் டெல்லியில்  நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி டெல்லி அழைத்து வந்து உள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய  வேலை வாங்கி கொடுத்து உள்ளார்.

ஆனால்  சம்பளத்தை அந்த சிறுமியிடம் இருந்து மாதம் மாதம்  மன்ஜித் பறித்து கொள்வார்.  இது  தான் வாடிக்கையாக இருந்து உள்ளது. இந்த நிலையில் சிறுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டுவிட்டு கர்கெட்டா  சென்று  தனது சம்பள பணத்தை கேட்டு வந்து உள்ளார் . இந்த நிலையில் டெல்லி  மியான் வாலி நகரில்  உள்ள ஒரு வாய்க்காலில் சிறுமி பிண்மாக கிடந்து உள்ளார். அவரது உடல் 12  துண்டாக வெட்டப்பட்டு இருந்தது. 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மன்ஜித் கொலை செய்தது  உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை கொலை செய்ததாக  ஒப்புக்கொண்டார். அதற்கு 2 பேர் உதவி செய்ததாக கூறி உள்ளார்.

Next Story