இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது; பணம், மருந்து பறிமுதல்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர்.
பெரோஸ்பூர்,
இந்தியாவின் பஞ்சாபில் பெரோஸ்பூர் பிரிவில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் ஜல்லோக் எல்லையை ஒட்டிய இடத்தில் பாகிஸ்தானியர் ஒருவர் நுழைந்து உள்ளார்.
அவரை எல்லை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முகமது ஆசிப் (வயது 32) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து முகமதுவிடம் இருந்து பாகிஸ்தானிய மதிப்பில் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது. மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story