ஜம்முவில் பள்ளி கூடத்தின் வகுப்பறையில் இருந்த 2 சிறுத்தை புலி குட்டிகளால் பரபரப்பு
ஜம்முவில் பள்ளி கூடம் ஒன்றின் வகுப்பறையில் கண்டெடுக்கப்பட்ட 2 சிறுத்தை புலி குட்டிகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பஞ்சாரி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்குள்ள வகுப்பறை ஒன்றில் இரண்டு சிறுத்தை புலி குட்டிகள் கிடந்துள்ளன.
இந்த நிலையில் இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் அவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி உடனடியாக அவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வந்துள்ளனர். 2 சிறுத்தை குட்டிகளில் ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதன்பின் வன துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வன துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று உயிருடன் இருந்த சிறுத்தை புலியை தங்களுடன் எடுத்து சென்றனர்.
ஜம்முவில் பள்ளி கூட வகுப்பறையில் இருந்த சிறுத்தை புலி குட்டிகளால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
Related Tags :
Next Story