முதல்–மந்திரியை தரக்குறைவாக பேசிய வழக்கில் காஷ்மீர் முன்னாள் மந்திரியின் சகோதரர் கைது


முதல்–மந்திரியை தரக்குறைவாக பேசிய வழக்கில் காஷ்மீர் முன்னாள் மந்திரியின் சகோதரர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 4:23 PM GMT (Updated: 10 Jun 2018 4:23 PM GMT)

முதல்–மந்திரியை தரக்குறைவாக பேசிய வழக்கில் காஷ்மீர் முன்னாள் மந்திரியின் சகோதரர் கைது

ஜம்மு, 

காஷ்மீர் மாநில முன்னாள் மந்திரியும் மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான லால்சிங் ஏற்பாடு செய்த பேரணியில் பங்கேற்ற அவரது சகோதரர் ராஜிந்தர் சிங், மாநில முதல்–மந்திரி மெகபூபாவை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த ராஜிந்தர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து காஷ்மீருக்கு கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Next Story