ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி


ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2018 1:01 AM GMT (Updated: 13 Jun 2018 1:01 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். #JammuAndKashmir

ஸ்ரீநகர், 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்புக்கும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்தனர். 

Next Story