இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு கோவா திரும்பினார் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர்


இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு கோவா திரும்பினார் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர்
x
தினத்தந்தி 14 Jun 2018 1:33 PM GMT (Updated: 14 Jun 2018 1:33 PM GMT)

இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கோவா திரும்பினார். #ManoharParrikar

பானஜி,

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் சிகிச்சைகள் பெற்றார். இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கார் இன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர், மும்பை வந்தார். அங்கிருந்து மாலை கோவா திரும்பினார். பானஜி விமான நிலையத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த மனோகர் பாரிக்கரை, அதிகாரிகள் வரவேற்றனர். 

Next Story