பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்


பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்
x
தினத்தந்தி 19 Jun 2018 12:15 AM GMT (Updated: 18 Jun 2018 10:06 PM GMT)

சண்டிகாரிலுள்ள ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை தெருநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகார், 

சண்டிகார் நகரின் பல்சோரா பகுதியைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர், தனது 4 குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட விட்டுவிட்டு, வீடுகளுக்கு வேலை செய்ய சென்று இருந்தார்.

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது பூங்காவில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், அந்த குழந்தைகளின் அருகில் வந்து குரைத்தபடி கடிக்க முயன்றன. உடனே 3 குழந்தைகள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டன. 1½ வயதான ஆயுஷ் என்ற குழந்தையால் எழுந்து ஒட முடியவில்லை. நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில் அந்த குழந்தை படுகாயம் அடைந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் குழந்தை ஆயுஷை மீட்டு, சிகிச்சைக்காக அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆயுஷை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தெரு நாய்களின் தொல்லையை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story