எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!


எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!
x
தினத்தந்தி 19 Jun 2018 5:38 AM GMT (Updated: 19 Jun 2018 5:38 AM GMT)

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சம் பணத்தை எலி கொறித்து தள்ளியது வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. #TinsukiaATM



கவுகாத்தி,

 
அசாம் மாநிலம் லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ஏடிஎம்மில் ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம் வைக்கப்பட்ட மறுநாளே ஏடிஎம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை. ஏடிஎம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது. ஏடிஎம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து ஜுன் 11-ம் தேதி ஆட்கள் சரிசெய்யும் பணிக்கு சென்றார்கள். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய்களை எலி ஒன்று கடித்து துண்டு துண்டாக்கியிருந்தது. ரூபாய் நோட்டுக்கள் துண்டாக்கப்பட்டு இருந்தது தொடர்பாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏடிஎம்மில் இருந்த ரூ. 12,38,000 எலியால் சிதைக்கப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களால் ரூ. 17 லட்சத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஏடிஎம் பழுது அடைந்த உடன் அதனை சரிசெய்யும் பணி செய்யப்படதாதது ஏன்? என்று கேள்வி எழுந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.


Next Story