ஜார்க்கண்ட்டில் மின்னல் தாக்கி 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி


ஜார்க்கண்ட்டில் மின்னல் தாக்கி 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 26 Jun 2018 7:55 AM GMT (Updated: 26 Jun 2018 7:55 AM GMT)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். #LightninginJharkhand

போகாரோ,

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகாரோ மற்றும் லோஹர்டாகா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

போகாரோ மாவட்டத்தில் உள்ள அல்குஷா கிராமத்தின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனிடையே அருகிலிருந்தவர்கள் மின்னல் தாக்கி படுகாயமுற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே போகாரோ மாவட்டத்தின் ஜாரா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயமுற்றார். மின்னல் தாக்கிய பெண் உடலில் 65 சதவீத காயங்களுடன் போகாரோ அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போல் லோஹர்டாகா மாவட்டத்திலும் விவசாய பணியை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story