விழுங்கிய 9 முட்டைகளை வெளிக்கொண்டுவந்து பாப்பை காப்பாற்றிய பாம்பாட்டி


விழுங்கிய 9 முட்டைகளை வெளிக்கொண்டுவந்து பாப்பை காப்பாற்றிய பாம்பாட்டி
x
தினத்தந்தி 6 July 2018 10:38 AM GMT (Updated: 6 July 2018 10:38 AM GMT)

பெரிய நாகப்பாம்பு ஒன்று விழுங்கிய ஒன்பது முட்டைகளை பாம்பாட்டி ஒருவர் கக்கச் செய்யும் ஆச்சரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


கேரள மாநிலம் சந்திரபூரில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று ஒரு கோழியைக் கொன்றுவிட்டு அங்கிருந்த முட்டைகளை விழுங்கியிருக்கிறது . அளவுக்கதிகமான முட்டைகளை விழுங்கியதால் திணறிப்போன பாம்பு அசைய முடியாமல் கிடந்திருக்கிறது.

அதைக்கண்ட கிராமத்தினர்கள், பாம்பாட்டி  ஜுஜித் என்பவரை அழைத்துள்ளனர். அந்த பாம்பாட்டி லாவகமாக அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து அது விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக கக்கச் செய்கிறார். பாம்பு ஒவ்வொரு முட்டையாக கக்க, பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அதை சத்தமாக எண்ணுகிறார்கள்.  ஒன்பது முட்டைகளையும் கக்கியபிறகு சுறுசுறுப்பான பாம்பு மீண்டும் சீறிப்பாய்வதை வீடியோவில் காணலாம்.



Next Story