இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்; காலணிகளால் அடித்து தண்டனை வழங்கி பஞ்சாயத்தில் வாலிபர் விடுதலை


இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்; காலணிகளால் அடித்து தண்டனை வழங்கி பஞ்சாயத்தில் வாலிபர் விடுதலை
x
தினத்தந்தி 9 July 2018 7:42 AM GMT (Updated: 9 July 2018 7:42 AM GMT)

இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் காலணிகளால் அடித்து தண்டனை வழங்கப்பட்டு பஞ்சாயத்தில் விடுவிக்கப்பட்டார்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் கடைக்கு சென்றுள்ளார்.  அங்கிருந்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுபற்றி அந்த கிராமத்தின் சமூக பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இதில், தனது குற்றத்தினை அந்நபர் ஒப்பு கொண்டுள்ளார்.  தனது நடத்தைக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.  அவருக்கு காலணிகளால் அடித்து தண்டனை வழங்க பஞ்சாயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதன்பின் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

இந்த பஞ்சாயத்து பற்றிய வீடியோ வைரலாக பரவியது.  இந்த நிலையில், இளம்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இதனை அடுத்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story