டெல்லியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, பஸ் மூழ்கியது
டெல்லியின் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக டுவிட்டர்வாசிகள், படத்துடன் தகவல்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பஸ் மூழ்கிய சம்பவமும் நேரிட்டுள்ளது. டெல்லி மிண்டோ பாலம் பகுதியில் மழை காரணமாக பெருகிய தண்ணீருக்குள் பஸ் மூழ்கியது.
Related Tags :
Next Story